ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஸ்பைடர் படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கில் தனது மார்க்கெட் உச்சம் தொடும் என்று எதிர்பார்த்திருந்தார் ரகுல் பிரீத் சிங். ஆனால் அந்த படம் அதிர்ச்சி தோல்வியாக அமைந்ததால், அடுத்தபடியாக மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடிக்கயிருந்த விஜய் 62வது பட வாய்ப்பினை இழந்தார். அதோடு ஸ்பைடர் தோல்வியினால் தெலுங்கிலும் ரகுல் பிரீத் சிங்கின் மார்க்கெட் சரிந்தது. அதன்காரணமாக இந்தியில் அய்யாரி படத்தில் கமிட்டாகி நடித்த அவர், தற்போது அஜய்தேவ்கன் நடிக்கும் படமொன்றில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், இந்தி, தமிழில் நடிக்கும் புதிய படங்களில் ரகுல் பிரீத் சிங் இரண்டாவது நாயகியாக நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த செய்தியைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ரகுல்பிரீத்சிங் உடனடியாக அதற்கு மறுப்பு செய்தி வெளியிட்டுள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில், தற்போது நான் நடித்து வரும் படங்களில் முதன்மை நாயகியாகத்தான் நடிக்கிறேன். நான் நடிக்கும் படங்களில் வேறு நாயகிகளும் நடித்தபோதும், அவர்களை காரணம் காட்டி எனது ரோலை டைரக்டர்கள் டம்மியாக்கவில்லை. அப்படி மற்ற நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டு என்னை இரண்டாவது நாயகியாக்கினால் அந்த படங்களில் இருந்து நான் வெளியேறி விடுவேன் என்று தெரிவித்துள்ளார் ரகுல் பிரீத்சிங்.