ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'கபாலி' படத்தை தொடர்ந்து 'காலா' படத்தை இயக்கிவரும் பா.ரஞ்சித், இன்னொரு பக்கம் 'நீலம் புரொடக்ஷன்ஸ்' என்ற பட நிறுவனத்தை தொடங்கி தயாராப்பாளராகியும் விட்டார். இந்த நிறுவனம் சார்பில் 'பரியேறும் பெருமாள்' என்ற படத்தை தயாரித்துள்ளார். மாரி செல்வராஜ் என்பவர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் கதிர் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநயகியாக ஆனந்தி நடிக்கிறார். இவர்களுடன் 'யோகி' பாபு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவிருக்கிறது.
தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத் தயாரிப்பாளரான வினோத் இப்படத்தின் தயாரிப்பில் இணைந்துள்ளார். அவரது முயற்சியில் 'பரியேறும் பெருமாள்' படத்தை நல்ல விலை கொடுத்து வாங்கியுள்ளது லைகா புரொடக்ஷன்ஸ்.
'பரியேறும் பெருமாள்' படத்தை அடுத்த மாதம் (மார்ச்) வெளியிட பா.ரஞ்சித் முடிவு செய்துள்ளார். படம் வெளியாவதற்கு முன்னரே பா,இரஞ்சித்துக்கு லாபத்தைக் கொடுத்துவிட்டது 'பரியேறும் பெருமாள்.