ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர்கள் ரஜினி - கமல் இருவருமே அரசியலில் களமிறங்கி உள்ளனர். கமல் வருகிற பிப்., 21-ம் தேதி முதல் தனது அரசியல் பயணத்தை ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆரம்பிக்கிறார். அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.
மற்றொருபுறம் நடிகர் ரஜினி, மாவட்டம்தோறும் நிர்வாகிகளை நிர்வகித்து வருகிறார். இதற்கான வேலைகள் மும்முரமாய் நடந்து வருகின்றன. இந்த நிலையில் ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்தில், அவரது நண்பரும், அரசியல் ஆலோசகருமான தமிழருவி மணியன் இன்று சந்தித்தார்.
இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பில் ரஜினியின் தீவிர அரசியல் குறித்தும், மாவட்டம் தோறும் நிர்வாகிகளை விரைந்து நியமிப்பது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்றுள்ளது.
இந்த மாத இறுதிக்குள் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் ரஜினி மக்கள் மன்றத்திற்கான நிர்வாகிகள் அனைவரையும் நியமித்துவிட்டு, அடுத்த மாதம் முதல் தமிழகம் முழுவதும் ரஜினி சுற்றுப்பயணம் மேற்கொள்வது தொடர்பாகவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.