ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய் தற்போது தனது 62வது படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார், ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். .
இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னை அருகே உள்ள முட்டுக்காடு பகுதியில் உள்ள கடற்கரையில் செட்போட்டு நடந்து வருகிறது. கடைவீதி போன்று போடப்பட்ட செட்டில் இரண்டு வாலிபர்கள் ஒரு பெண்ணின் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடுவது போலவும், விஜய், அவர்களை தடுத்து நிறுத்தி பைக் ஓட்டகிறவனை அலேக்காக தூக்கி தரையில் அடிப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது.
இந்த காட்சியை சுற்றி படப்பிடிப்பு குழுவினர் நிற்கிறார்கள். படப்பிடிப்பில் செல்போனை பயன்படுத்தக்கூடாது என்ற கடுமையான விதிமுறை இருந்தும் யாரோ பின்னால் நின்று இந்த காட்சியை செல்போனில் படம்பிடித்து இணைய தளத்தில் வெளியிட்டுள்ளனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு காலா படத்தின் காட்சிகள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.