ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தமிழ் சினிமாவில் வில்லன்கள் என்றாலே நம்பியார், பி.எஸ்.வீரப்பா, அசோகன், ஆர்.எஸ்.மனோகர், பின்னாளில் ரஜினிகாந்த், சத்யராஜ், ரகுவரன் இப்படித்தான் நினைவுக்கு வருவார்கள். ஆனால் நம்பியார் காலத்தில் அவரை விடவும் பவர்புல் வில்லனாக இருந்தவர் எஸ்.ஏ.நடராஜன்.
திருப்பூர் மாவட்டம் சோமத்தூர் என்ற ஊரைச் சேர்ந்த எஸ்.ஏ.நடராஜன் நடிப்பு ஆசையால் நாடங்களில் நடிக்க ஆரம்பித்தார். நவாப் ராஜமாணிக்கம் நாடக கம்பெனியில் சேர்ந்த அவர் பெரும்பாலும் பெண் வேடத்தில் நடித்தார். ஒரு முறை இன்பசாகரன் என்ற நாடகத்தில் வில்லனாக நடிக்க வேண்டிய நம்பியார் வராததால் அந்த கேரக்டரில் நடராஜன் நடித்தார். அது பாராட்டப்படவே அதன்பிறகு நாடகங்களில் வில்லனாக நடித்தார்.
நாடக வாழ்க்கைக்கு பிறகு சினிமா வாய்ப்பு தேடினார். டி.ஆர்.சுந்தரம் இயக்கிய சதி சுகன்யா படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களில் வில்லனாக நடித்தவர் மந்திரி குமாரி படத்தில் ராஜகுரு எம்.என்.நம்பியாரின் மகனாகவும், கொள்ளைக்கூட்டத் தலைவனாகவும் நடித்தார். படத்தில் நம்பியாரை விட அதிகம் பேசப்பட்டவர் நடராஜன். மனோகரா படத்திலும் வில்லானக நடித்து புகழ்பெற்றார்.
நம்பியாருக்கு இணையாகவோ அல்லது அவருக்கு போட்டியாகவோ வளர்ந்திருக்க வேண்டிய நடராஜன் சொந்தப் படம் எடுத்து பெரும் நஷ்டத்திற்கு உள்ளானதால் சினிமாவை விட்டே விலக நேர்ந்தது. அதனால் அவரை மக்களும் மறந்து விட்டார்கள்.