ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? |
வன்முறை தூண்டும் விதத்தில் பேசிய பாராதிராஜா மீது முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யலாம் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
படவிழா ஒன்றில் பேசிய இயக்குநர் பாரதிராஜா, வைரமுத்துவிற்கு தலைகுனிவு ஏற்படும் வகையில் ஏதாவது நடந்தால் பிறர் தலையை எடுக்கவும் தயங்க மாட்டோம் என வன்முறையை தூண்டும் விதமாக பேசினார். மேலும் கடவுள் விநாயகரை இறக்குமதி கடவுள் என்றும் குறிப்பிட்டார். இதுதொடர்பாக இந்து மக்கள் முன்னணி அமைப்பின் சார்பில் நாராயணன் என்பவர் பாரதிராஜா மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இருபிரிவினர் இடையே மோதலை தூண்டும் விதத்தில் பேசிய பாரதிராஜா மீது முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யலாம் என கோர்ட் உத்தரவிட்டது.