14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
வன்முறை தூண்டும் விதத்தில் பேசிய பாராதிராஜா மீது முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யலாம் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
படவிழா ஒன்றில் பேசிய இயக்குநர் பாரதிராஜா, வைரமுத்துவிற்கு தலைகுனிவு ஏற்படும் வகையில் ஏதாவது நடந்தால் பிறர் தலையை எடுக்கவும் தயங்க மாட்டோம் என வன்முறையை தூண்டும் விதமாக பேசினார். மேலும் கடவுள் விநாயகரை இறக்குமதி கடவுள் என்றும் குறிப்பிட்டார். இதுதொடர்பாக இந்து மக்கள் முன்னணி அமைப்பின் சார்பில் நாராயணன் என்பவர் பாரதிராஜா மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இருபிரிவினர் இடையே மோதலை தூண்டும் விதத்தில் பேசிய பாரதிராஜா மீது முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யலாம் என கோர்ட் உத்தரவிட்டது.