ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தெலுங்கில் வெளியான அர்ஜூன்ரெட்டி படத்தில் நடித்து பிரபலமானவர் ஷாலினி பாண்டே. தற்போது தமிழில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்து வரும் 100 காதல் என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இதுதவிர தமிழ் தெலுங்கில் தயாராகி வரும் மகாநதி படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் ஷாலினி பாண்டே.
சினிமாவில் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஷாலினி பாண்டே நல்ல பாடும் திறன் கொண்டவர். ஏற்கனவே சில ஆல்பங்களில் அவர் பாடியிருக்கிறாராம். இந்த நிலையில், தற்போது தெலுங்கில் தயாராகி வரும் நா பிரணமை என்ற படத்திற்காக ஒரு முழுப்பாடல் பாடயிருக்கிறார் ஷாலினி பாண்டே. இந்த பாடல் பிப்ரவரி 14-ந்தேதி வெளியாக உள்ளதாம். தான் பாடிய முதல் பாடல் காதலர் தினத்தில் வெளியாகயிருப்பதால் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகிறார் ஷாலினி பாண்டே.