ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்நாடு அரசியல் களம் கடந்த ஒரு வருட காலமாகவே பல புதிய வினோதங்களை சந்தித்து வருகிறது. அவற்றில் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலில் இறங்கியதும் ஒன்று. இருவருமே அவர்களது ஆரம்ப கட்ட அரசியல் நகர்வுகளை ஆரம்பித்துவிட்டார்கள். எதிர்காலத்தில் அவர்களது அரசியல் பாதை எப்படி இருக்கப் போகிறது என்பது அவர்கள் நடந்து கொள்ளும் விஷயத்தில்தான் உள்ளது.
ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலில் கூட்டணி சேர்வார்களா என சமீப காலமாக கேள்வியும் எழுந்து வருகிறது. ஆனால், ரஜினியுடன் அரசியல் கூட்டணி சேர மாட்டேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நடந்த கலந்துரையாடலில் பேசிய கமல்ஹாசன், “எனது அரசியல் கொள்கையின் நிறம் கருப்பு. ஆனால், ரஜினியின் முதல் அறிவிப்பு குறித்து யோசிக்க வேண்டியிருக்கிறது. ரஜினியின் கொள்கை காவியாக இருக்காது என்று நம்புகிறேன். ஒருவேளை அவரது அரசியல் நிறம் காவியாக இருந்தால் அவருடன் கூட்டணி சேர வாய்ப்பில்லை,” என்று தெரிவித்தார்.
ரஜினிகாந்த் அவருடைய முதல் அரசியல் அறிவிப்பில் ஆன்மீக அரசியல் என்ற ஒரு விஷயத்தை அறிவித்தார். அதைத் தொடர்ந்து அது பற்றியும் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் கமல்ஹாசன் அது பற்றி பேசியிருப்பதும் கவனிக்க வேண்டிய ஒன்றாக ஆகியிருக்கிறது.
நிஜ வாழ்க்கையில் நண்பர்களாக இருக்கும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியலில் எதிர் எதிர் துருவங்களாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.