ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இலங்கை அகதிகள் பற்றியும், இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் பற்றியும் உருவாகி உள்ள படம் சாட்சிகள் சொர்க்கத்தில். ஈழன் இளங்கோவன் இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது:
'சாட்சிகள் சொர்க்கத்தில்' ஒரு நடப்பியலுக்கு மாறுபட்ட தன்மையுடைய கதை பாணியில் அமைக்கப்பட்ட படம். இலங்கை படையினரால் துன்புறுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டவர்கள், அகதிகளாய் அயல் நாடுகளில் வாழ்பவர்கள் ஆகியோரின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவான படம்.
2009ல் இலங்கை படையினரால் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட பிரபாகரனின் புதல்வன் பாலச்சந்திரன், பாடகியும் உடகவியளாளரும், நடிகையுமான இசைப்ரியா ஆகியோரின் இழப்பை கருவாக கொண்டு உருவான கதை. பாலச்சந்திரனின் வேடத்தில் எனது மகன் சத்யா இளங்கோ நடித்துள்ளார். கற்பழிப்பு கட்சிகளோ, கொலை கட்சிகளோ துன்புறுத்தல் கட்சிகளோ இத்திரைப்படத்தில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, இருப்பினும், அதைவிட ஆழமான உணர்வுகளையும் வலியையும் அடக்கியுள்ளது இத்திரைப்படம்.
ஆஸ்திரேலியாவிலும் , பிரான்ஸ் நாட்டிலும் படமாக்கப்பட்ட இப்படத்தின் தொழில்நுட்ப வேலைப்பாடுகள் தமிழ் நாட்டு திரைக் கலைஞர்களால் செய்யப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கு சதிஷ் வர்ஷன் இசையமைத்துள்ளார். ஆஸ்திரேலிய£ , பிரான்ஸ் நாட்டில் வாழும் தமிழ் நடிகர்கள் நடித்துள்ளனர். என்றார் ஈழன் இளங்கோ.