ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்த் திரையுலகத்தில் 20 வருடங்களுக்கு முன்பு இயக்குனராக அறிமுகமானவர்களில் இன்னமும் தொடர்ந்து படங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரே இயக்குனர் சுந்தர் .சி மட்டுமே. எப்படி இத்தனை வருடங்களாக உங்களால் மட்டும் படங்களைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்க முடிகிறது என்று ஒரு முறை அவரிடம் கேட்ட போது, 'காலத்திற்கேற்றபடி நம்மை 'அப்டேட்' செய்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். அந்த 'அப்டேட்' என்ன என்பது அவருடைய படங்களைப் பார்த்தாலே தெரியும்.
இசையமைப்பாளர், நடிகர்கள் என அந்தந்த காலகட்டத்தில் யார் டிரென்டிங்கில் இருக்கிறார்களோ அவர்களை வைத்தே படங்களை இயக்குவார். கவுண்டமணி, வடிவேலு, விவேக், சந்தானம், சூரி, சதீஷ், ரோபோ சங்கர் என நகைச்சுவை நடிகர்களைப் பார்த்தாலே அதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
'கலகலப்பு 2' படம் பற்றி இருவிதமான விமர்சனங்கள் வந்தாலும் பொழுது போக்கு படமாக இருப்பதாக தியேட்டர் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். இந்தப் படத்தை விளம்பர செலவு உட்பட சுமார் 8 கோடிக்குள் முடித்துக் கொடுத்துவிட்டாராம் இயக்குனர் சுந்தர் .சி. அதில் அவருடைய சம்பளம் 10 கோடியைச் சேர்க்கவில்லை என்கிறார்கள். படத்தின் தமிழ்நாட்டு உரிமை, சாட்டிலைட் உரிமை ஆகிய இரண்டும் சேர்ந்து 15 கோடி வரை விற்கப்பட்டுள்ளது.