ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
கடந்த சில நாட்களாக மாரி-2 படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் நடைபெற்றது. அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து படக்குழுவினர் புறப்பட்டதும், விஷால் நடிக்கும் சண்டக்கோழி- 2 படக்குழுவினர் தென்காசியில் நுழைந்திருக்கிறார்கள்.
சில வாரங்களுக்கு முன் 'சண்டக்கோழி-2' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பின்னி மில்லில் தொடங்கி தொடர்ந்து நடந்து வந்தது. இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை திண்டுக்கல்லில் நடத்த திட்டமிட்டிருந்தார் இயக்குநர் லிங்குசாமி.
கடைசி நேரத்தில் திண்டுக்கல் வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டு தென்காசியை தேர்வுசெய்தனர். இப்போது தென்காசியில் முகாமிட்டிருக்கும் 'சண்டக்கோழி-2' படக்குழுவினர் அங்கு பிப்ரவரி- 3-ஆம் தேதியிலிருந்து படப்பிடிப்பை துவங்கியுள்ளனர்.
அங்கு 40 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதோடு, 'சண்டக்கோழி'படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விடுமாம். ஆனால் விஷால் அடிக்கடி சென்னை வர வேண்டிய சூழல் இருப்பதால் படம் திட்டமிட்டப்படி முடியாத சூழல் உள்ளதாம். கோடை விடுமுறையில் 'சண்டக்கோழி-2'வை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று லிங்குசாமி முடிவு செய்துள்ளார்கள். அது விஷாலின் கையில் தான் உள்ளது.