ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காற்று வெளியிடை படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கும் புதிய படம் பற்றி பல்வேறு தகவல்கள் வெளிவந்தது. தற்போது அவரது அடுத்த படம் பற்றிய தகவல்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது.
மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தின் தலைப்பு செக்கச்சிவந்த வானம். தெலுங்கு மற்றும் இந்தியில் நவாப் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், லைகா புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இதில் விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூரலிகான், ஜெயசுதா, அதிதிராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் பகத்பாசில் நடிப்பதாக இருந்தது தற்போது அவருக்கு பதிலாக அரவிந்த்சாமி சேர்க்கப்பட்டுள்ளார்.
மணிரத்னத்தின் ஆஸ்தான இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். திலீப் சுப்பாராயன் சண்டை காட்சிகளை அமைக்கிறார் கதை, திரைக்கதை, வசனத்தை சிவா ஆனந்துடன் இணைந்து மணிரத்னம் எழுதியிருக்கிறார். திங்கள் கிழமை இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.