ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவில் வாரிசுகளின் அறிமுகம் எந்தக் காலத்திற்கும் குறையவே குறையாது. தமிழ் சினிமாவில் பல இயக்குனர்களும், நடிகர்களும் வளர்ந்து நிற்கக் காரணமாக இருந்தவர் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி. அவரது மகன் ஜீவா நடிகராக அறிமுகமாகி 15 வருடங்கள் ஆனாலும், இன்னமும் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடிக்காமல் இருக்கிறார்.
2011ம் ஆண்டு வெளிவந்த 'கோ' படம் அவருக்கு கமர்ஷியல் ஹீரோவாக பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்தாலும் அதன் பின் தேர்வு செய்த படங்களில் கோட்டை விட்டார் ஜீவா. கடந்த ஏழெட்டு வருடங்களாகவே வெற்றிக்கும் அவருக்கும் தூரம் அதிகமாகவே இருக்கிறது. கடந்த ஆண்டு அவர் நடித்து வெளிவந்த ஒரே படமான 'சங்கிலி புங்கிலி கதவ தொற' படம் கூட தோல்விப் படமாகத்தான் அமைந்தது.
இந்த ஆண்டில் அவருடைய முதல் வெளியீடாக வரும் 9ம் தேதி 'கலகலப்பு 2' படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ஜீவாவைத் தவிர ஜெய், சிவா ஆகியோரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இந்தப் படமாவது வெற்றியாக அமைந்தால்தான், அடுத்தடுத்து ஜீவாவை வைத்து படங்களைத் தயாரிப்பவர்கள் தெம்பாக இருப்பார்கள்.