ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்தாண்டு ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது, சேலம், அம்மாபேட்டையை சேர்ந்த யோகேஸ்வரன் என்ற வாலிபர் ரயிலில் ஏறி போராட்டம் செய்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதையடுத்து அந்த குடும்பத்திற்கு உதவி செய்வதாக அறிவித்திருந்த லாரன்ஸ், ரூ.25 லட்சம் மதிப்புள்ள வீட்டை கட்டி கொடுத்து, யோகஸ்வரனின் நினைவுநாளான இன்று அதை அவர்களுக்கு அளித்தார். இன்று நடந்த கிரகப்பிரவேசம் நிகழ்ச்சியில் லாரன்ஸ் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த லாரன்ஸ், யோகேஸ்வரன் குடும்பத்தை பாதுகாப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை. யோகேஸ்வரன் தாய்க்கு வீடு கட்டிக் கொடுத்தது மன நிறைவை தருகிறது. அரசியலில் செய்ய வேண்டியதை நான் இப்போது செய்து வருகிறேன். நான் அரசியலுக்கு வர ஆசைப்படவில்லை. ரஜினியும், கமலும் அரசியலுக்கு வந்து நல்லது செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். சுயநலம் இல்லாத நல்ல உள்நோக்கம் கொண்ட யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அரசியலுக்கு வர எனக்கு பயமில்லை. ஆனால் என் அம்மா, என்னுடன் இருக்கும் குழந்தைகள் தற்போதைய அரசியல் சூழலை கண்டு பயப்படுகிறார்கள். என் தாய்க்கு அரசியல் பயம் போய், என்னை அரசியலுக்கு செல்ல அவர் சம்மதம் சொன்னால் அரசியலுக்கு வருவேன்.
இவ்வாறு லாரன்ஸ் கூறினார்.