ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடித்துள்ள 'காளி' படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் நிறைவு பெற்றது. அதற்கடுத்து உடனடியாக தனது அடுத்த படத்தை ஆரம்பித்துவிட்டார் விஜய் ஆண்டனி.
'திமிரு பிடிச்சவன்' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள அந்தப் படத்தை கணேஷா இயக்குகிறார். இப்படத்தின் நாயகியாக நிவேதா பெத்துராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
நிவேதா நடித்து முடித்துள்ள 'டிக் டிக் டிக்' படம் விரைவில் வெளியாக உள்ளது. அவர் நடித்துள்ள மற்றொரு படமான 'பார்ட்டி' படமும் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. அவற்றிற்கு அடுத்து நிவேதா தற்போது நடிக்கும் ஒரே படம் 'திமிரு பிடிச்சவவன்'.
இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி, இன்ஸ்பெக்டராகவும், நிவேதா பெத்துராஜ், சப் இன்ஸ்பெக்டராகவும் நடிக்க உள்ளார்களாம். படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. இப்படத்திற்காக நிவேதா சில பல பயிற்சிகளை மேற்கொண்டுள்ளாராம். அதில் பைக்கை ஓட்டும் பயிற்சியும் அடங்கியுள்ளது. விஜய் ஆண்டனியுடன் போலீசாக நடிப்பதற்கு எத்தனை விஜயசாந்தி படங்களைப் போட்டுப் பார்த்திருப்பாரோ நிவேதா ?.