வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது |
பொறியாளருக்கு படித்து விட்டு தொகுப்பாளினி ஆனவர் சுவதிஷ்டா. சென்னை பொண்ணு. பல சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிவர் திடீரென்று சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். தன்னை பேட்டி எடுத்தவரை அப்படியே சினிமாவுக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டார் மிஷ்கின்.
சவரக்கத்தி படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருக்கிறார். அடுத்து ஜீவாவுடன் கீ படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இதற்கிடையில் மதம் என்ற படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்தார். இந்த படங்களின் வருகைக்கு பிறகு சினிமாவில் பிசியாக நடிக்க முடிவு செய்திருக்கிறார்.
இதற்கிடையில் ஆபாயில் என்ற வெப் சீரியலில் நடித்து அதிலும் பாப்புலராகி விட்டார். இனி தொகுப்பாளினி வேலைக்கு குட்பை சொல்லிவிட்டு சினிமாவிலும், வெப் சீரியல்களிலும் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார் சுவதிஷ்டா.