ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சினிமாவையும் காதல் கிசுகிசுக்களையும் பிரிக்கவே முடியாது. சீரான இடைவெளியில் ஏதாவது ஒரு ஜோடியைப் பற்றி அப்படி காதல் கிசுகிசுக்கள் வந்து கொண்டுதானிருக்கும். 'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு அந்தப் படத்தின் ஜோடிகளான பிரபாஸ், அனுஷ்கா இருவரைப் பற்றியும் அதிகமான கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் அது பற்றி மறுத்திருந்தாலும் இன்னமும் விடாமல் அந்த கிசுகிசு அவர்களை துரத்திக் கொண்டுதான் இருக்கிறது.
சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திருமணம் பற்றி அனுஷ்கா வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். “திருமணத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எனக்குப் பொருத்தமான ஒருவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும், குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதை சரியான சமயத்தில் செய்வேன். எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்.
எனது பெற்றோர் என்னை எப்போதும் கட்டாயப்படுத்தியதே இல்லை. எனக்கு 20 வயது ஆனதிலிருந்தே அவர்கள் என்னைத் திருமணம் செய்து கொள்ளச் சொன்னார்கள். ஆனால், நான் அதைச் சரியான சமயத்தில் செய்வேன் என்பது அவர்களுக்கும் தெரியும். எனது எண்ணங்களுக்கு அவர்கள் மரியாதை கொடுப்பார்கள், என்னை எப்போதும் கட்டாயப்படுத்த மாட்டார்கள்,” என்று கூறியிருக்கிறார்.
அனுஷ்கா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை. அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'பாகமதி' தெலுங்குப் படம் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது.