ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நடிகை அல்போன்சாவின் காதலன் தற்கொலை செய்து கொண்டதால், துக்கம் தாங்காமல் அல்போன்சாவும் தற்கொலை முயற்சி செய்துள்ளார். தமிழில் பாட்ஷா, ராஜஸ்தான், தில் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை அல்போன்சா. கவர்ச்சி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த அல்போன்சா சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. இவரது கணவர் நோபல் துபாயில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 6வயதில் ஒரு மகளும் இருக்கிறார். அல்போன்சாவுக்கும், நோபலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் அல்போன்சாவுக்கு தனது தம்பியும் டான்ஸ் மாஸ்டருமான ராபர்ட் மூலம் வினோத் குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலிக்க தொடங்கி, கடந்த ஓராண்டு காலமாக இப்போது இருவரும் விருகம்பாக்கத்தில் உள்ள அபார்ட்மென்ட் குடியிருப்பில் ஒன்றாக தங்கி வந்துள்ளனர். நேற்று இரவு அல்போன்சாவுக்கும், காதலன் வினோத்குமாருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை அல்போன்சா தூங்கி எழுந்து பார்த்தபோது வினோத்குமார் வீட்டின் ஒரு அறையில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அல்போன்சா அலறியடித்து கொண்டு விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து வினாத்குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வினோத்குமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து அல்போன்சாவிடம் விசாரனை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் காதலன் இறந்த தூக்கம் தாளாமல் அல்போன்சாவும் தற்கொலை முயற்சி மேற்கொண்டார். வீட்டில் இருந்தபடி அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரையை உண்டுள்ளார். இதையடுத்து மயக்கம் அடைந்த அல்போன்சா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதனிடையே வினாத்குமாரின் மூக்கு மற்றும் வாயில் ரத்த கறை படிந்திருப்பதாகவும், அவர் தற்கொலை செய்யவில்லை, அல்போன்சாவும், அவரது தம்பி ராபர்ட்டும் சேர்ந்து வினோத் குமாரை அடித்து கொன்று விட்டதாக வினோத்குமாரின் தாய்மாமன் சுகுமாறன் என்பவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
நடிகையின் காதலன் தற்கொலை மற்றும் அவரைத் தொடர்ந்து நடிகையும் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் வினோத்குமார் தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.