ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
இயக்குநர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார். தன் தற்கொலைக்கு காரணம், மதுரையைச் சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் அன்புசெழியன் தான். வட்டிக்கு பணம் கொடுத்து, பணத்தை திருப்பிக் கேட்டு தொந்தரவு கொடுத்ததால் தற்கொலை முடிவுக்கு வந்ததாக கடிதம் எழுதி வைத்து விட்டு இறந்து போனார் அசோக்குமார்.
இதையடுத்து, அன்புசெழியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் அரசுக்கு நெருக்கடி கொடுக்க, அன்பு செழியன் மீது வழக்கும் தொடரப்பட்டது. இதனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்த அன்புசெழியன், பின், அதை வாபஸ் பெற்றார். அதனால், குறிப்பிட்ட அந்த வழக்கில், அன்புசெழியனுக்கு, இது நாள் வரை முன் ஜாமின் மனு கிடைக்கவில்லை.
அன்புசெழியன் தலைமறைவாகி விட்டார். அவரை தொடர்ந்து தேடி வருகிறோம் என போலீஸ் தரப்பில், அன்புசெழியனை பிடிக்காததற்கு கதை சொல்லி கொண்டிருந்தனர். ஆனால், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வந்த அன்புசெழியன், இரண்டு நாட்களுக்கு முன், மதுரையில், அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டு விஷேசத்துக்கு வந்த முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரோடு கலந்து கொண்டார். இந்த விவகாரம் இப்போது, சினிமா வட்டாரங்களில் புயல் வீசத் துவங்கி இருக்கிறது.
அரசுத் தரப்பில், அன்புசெழியன் தலைமறைவாக இருப்பதாகச் சொல்லி, கைது செய்யாமல் இருப்பதோடு, முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளிலேயே, அன்புசெழியன் கலந்து கொள்கிறார் என்றால், சட்டம் - ஒழுங்கை சமமாக பாதித்து அரசு எடுக்கும் நடவடிக்கைகளில் லட்சணம் இதுதான் என, சினிமா வட்டாரங்களில் பிரபலங்களாக இருப்பவர்கள் பலரும் கொந்தளிக்கின்றனர். முதல்வருக்கு தெரிந்தே தான் இதெல்லாம் நடக்கிறது என்றும் கூறுகின்றனர்.
இதேப்போல, பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.,வான வெற்றிவேல் மீது, ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை வெளியிட்டது தொடர்பாக, அரசுத் தரப்பில் வழக்கு போடப்பட்டுள்ளது. அவரும், முன் ஜாமின் பெறவில்லை. ஆனால், அவரும் தினகரனோடு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்; வெளியில் தெரியவே சுற்றி வருகிறார். ஆனால், போலீஸ் அவரை பிடிக்கவில்லை. இப்படித்தான், போலீசார், அதிகாரத்தில் இருப்பவருக்கு ஒரு நியாயம்; நீதியும் செய்கிறது. அதிகாரத்தில் இல்லாதவர்களிடம் மட்டும் சட்டங்களி நிறைவேற்றுகிறது எனவும் கோலிவுட் வட்டாரங்களில் ஆக்ரோஷமாக பேசுகின்றனர்.