அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
விஜய்சேதுபதி, பஹத் பாசில், சிம்பு, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என மிகபிபெரிய நட்சத்திரக் கூட்டத்தை வைத்து மணிரத்னம் புதிய படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருப்பதாக தகவல் அடிபடுகிறது.
இதற்கிடையில் இந்த படத்தின் ஆரம்கட்ட நிலையிலேயே மணிரத்னத்துடன் 'லைகா புரொடக்ஷன்ஸ் கை கோர்த்துள்ளது. கத்தி படம் தொடங்கி ஏற்கெனவே பல படங்களை தயாரித்த 'லைகா புரொடக்ஷன்ஸ்' தற்போது ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் '2.0' படத்தை ரூ.400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. இந்த படம் ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகிறது.
இந்த படத்தை தொடர்ந்து இப்போது மணிரத்னம் இயக்கும் படத்தின் தயாரிப்பிலும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.