ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் விமல் தற்போது மன்னர் வகையறா என்ற படத்தை சொந்தமாக தயாரித்து நடித்துள்ளார். இந்தப் படம் நாளை வெளிவருகிறது. இந்த நிலையில் இந்தப் படம் தயாரித்த வகையில் கொடுத்த பணத்தை மோசடி செய்து விட்டதாக விமல் மீது சாலிகிராமத்தை சேர்ந்த பி.ஏ.கணேசன் என்பவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் அவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:
நான் கடந்த 3 ஆண்டுகளாக படத்தயாரிப்பில் ஈடுபட்டுள்ளேன். ஜி.கே.ஸ்டூடியோ என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறேன். நடிகர் விமலுடன் இணைந்து ஜி.கே.ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் 'மன்னர் வகையறா' என்ற பெயரில் புதிய படம் தயாரித்துள்ளோம். அந்த படத்தின் கதாநாயகனாக நடிகர் விமல் நடித்துள்ளார். குடியரசு தினத்தன்று படம் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் எனது பெயர் இல்லை.
மன்னர் வகையறா படம் தயாரிக்க நான் ரூ.1.75 கோடி கொடுத்துள்ளேன் . எனக்கு ரூ.2.15 கோடி, படம் வெளியானவுடன் தர வேண்டும், என்ற ஒப்பந்தம் உள்ளது. ஆனால் என்னை ஓரங்கட்டி விட்டு படத்தை வெளியிட முயற்சி நடக்கிறது. என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள். நடிகர் விமல் உள்ளிட்ட 3 பேர் எனக்கு தர வேண்டிய பணத்தை தராமல் மோசடி செய்யப்பார்க்கிறார்கள். உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு தர வேண்டிய பணத்தை வசூலித்து தரும்படி வேண்டுகிறேன்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.