ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சில பிரச்னைகளுக்கு தீர்வு சொல்வதை விட, செய்து காட்டுவது தான் சரியானதாக இருக்கும் என நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல், சுற்றுப்பயணத்திற்கு பெயர் வைக்க வேண்டும் என்ற உடனேயே எனக்கு நினைவுக்கு வந்த பெயர் நாளை நமதே. நாளை நமதே கனவு எம்ஜிஆருக்கும் இருந்தது. எனக்கும் உள்ளது. பஸ் கட்டண உயர்வு, டீசல் விலை உயர்வு போன்ற சில பிரச்னைகளுக்க தீர்வு சொல்வதை விட செய்து காட்டுவது தான் சரியானதாக இருக்கும். பஸ் கட்டணத்தை உயர்த்தாமல் பிரச்னையை தீர்ப்பதற்கு அண்டை மாநிலங்களில் உதாரணம் உள்ளது.
கட்சி தொடங்கிய பிறகு நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும். முதலில் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அங்கு, அரசு செய்ய தவறிய விஷயங்களை செய்து காட்ட உள்ளோம். அரசு துறைகள் அனைத்தும் லாபம் ஈடக் கூடியதாக இருக்க வேண்டும் என்பது இல்லை. மக்களுக்கு சேவை செய்யும் துறையாக இருக்க வேண்டும் என்பதற்காக அரசு மானியங்கள் வழங்குவதில் தவறில்லை. ஆன்மிக அரசியல் சாத்தியம் என எனக்கு தெரியவில்லை. மக்கள் நலன் தான் முக்கியம். நானாக இருந்தாலும், ரஜினியாக இருந்தாலும் நோக்கம் மக்களுக்கு சேவை செய்வது தான். கண்ட இடங்களில் தமிழ்த்தாய் இசைத்தால் தேவையற்ற பிரச்னைகள் எழத்தான் செய்யும்.
தேசிய அரசியலை விட தமிழக அரசியலுக்கு தான் முக்கியத்துவம் தருவேன். என் வீட்டிற்கு முதலில் நான் வேலைக்காரனாக இருக்க வேண்டும். எது வந்தாலும் எதிர்த்து அரசியல் செய்வேன். உடைப்பது என் வேலை அல்ல. கட்டுவது தான் வேலை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.