சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
தீபிகா படுகோனே நடித்த பத்மாவத் படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. படப்பிடிப்பின் போதே தாக்குதல், தணிக்கை குழுவில் இழுத்தடிப்பு, பல்வேறு அமைப்புகளின் கொலை மிரட்டல், இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் தீபாவின் தலைக்கு பரிசு அறிவித்தல், 5 மாநிலங்களின் கடுமையான எதிர்ப்பு, போராட்டங்கள், தியேட்டர்கள் மீது தாக்குதல் என அனைத்து தடைகளையும் மன உறுதியின் மூலமாகவும், சட்டத்தின் மூலமாகவும் உடைத்தெறிந்து வெளிவருகிறாள் பத்மாவதி.
கொலை மிரட்டல் காரணமாகவும், கடும் விமர்சனங்கள் காரணமாகவும் வீட்டில் முடங்கி கிடந்த தீபிகா படுகோனே இப்போது சுந்திர காற்றை சுவாசிக்கத் தொடங்கி உள்ளார். படம் நாளை வெளிவருவதையொட்டி. படம் எந்த பிரச்சினையும் இல்லாமல் நாடு முழுவதும் ஓடி வெற்றி பெற்று தயாரிப்பாளரும், இயக்குனருமான சஞ்சய் லீலா பன்சாலிக்கு விருதுகளையும், வசூலையும் குவிக்க வேண்டும் என்று நேற்று தீபிகா மும்பை சித்தி விநாயர் கோவிலில் மனமுருக பிரார்த்தனை செய்தார்.
முன்னதாக அவரை கோவில் நிர்வாகிகள் வரவேற்று அழைத்துச் சென்று சாமி கும்பிட வைத்தனர். சுமார் 15 நிமிடங்கள் அவர் சாமி முன்பு மனமுருக வேண்டி நின்றார். பின்னர் அவர் கோவில் நிர்வாகிகளுக்கு நன்றி தெரித்து புறப்பட்டார். தீபிகாவின் வருகையையொட்டி கோவிலைச் சுற்றி நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.