ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கயல் படத்தின் மூலம் பிரபு சாலமானல் அறிமுகப்படுத்தப்பட்டவர் சந்திரன் என்கிற சந்திரமவுலி. அதன் பிறகு ரூபாய் படத்தில் நடித்தார். தற்போது திட்டம்போட்டு திருடுற கூட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அவரது அண்ணன் ரகுநாதன் தயாரிக்கிறார். இந்த படத்தின் இணை தயாரிப்பாளராக இருந்த பிரபு வெங்கடாசலம் என்பவர் படத் தயாரிப்புக்காக தன்னிடம் 5 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டதாக கயல் சந்திரன் மீதும், அவரது அண்ணன் மீதும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார்.
இது தொடர்பாக கயல் சந்திரனும், அவரது அண்ணன் ரகுநாதனும் சென்னை பிரஸ் கிளப்பில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது கயல் சந்திரன் கூறியதாவது: திட்டம் போட்டு திருடுற கூட்டம் படத்தை எனக்காக என் அண்ணன் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளராக வந்தவர் தான் பிரபு வெங்கடாசலம். அதற்காக அவர் 2 கோடியே 40 லட்சம் கொடுத்தார். இந்தப் படம் தயாரிப்பில் இருந்தபோதே இரண்டு படங்களை வாங்கி விநியோகித்தார். அதில் பெரும் நஷ்டம் அடைந்தார். நிறைய கடனும் வந்தது. அதை அடைக்க எங்களிடம் ஒரு கோடி வாங்கினார். மீதி நாங்கள் அவருக்கு தரவேண்டியது ஒரு கோடியே 40 லட்சம். ஒப்பந்தப்படி அதை நாங்கள் பட ரிலீசுக்கு பிறகே கொடுக்க வேண்டும்.
இந்த நிலையில் பிரபு வெங்கடாச்சலத்துக்கு நிறைய கடன்கள் இருப்பதால் அவர் இணை தயாரிப்பாளராக இருக்கும் படத்திற்கு பிரச்னை வரலாம் என்று யாரும் படத்தை வாங்க முன்வரவில்லை. இதை அவரிடம் எடுத்துக் கூறி அவரது பெயரை இணை தயாரிப்பாளர் என்ற நிலையிலிருந்து நீக்கினோம். இந்த நிலையில் எங்கள் மீது 5 கோடி ரூபாய் மோசடி புகார் கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நான் இந்தப் படத்தின் நடிகன் தான். பிரபு வெங்கடாச்சலத்தோடு எந்த பண பரிவர்த்தனையும் எனக்கு கிடையாது. இந்த நிலையில் என் மீதும் புகார் கொடுத்திருப்பதை என் வளர்ச்சியை தடுக்கும் சதியாகவே பார்க்கிறேன். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், ஆகியவற்றில் புகார் கொடுத்துள்ளேன். போலீசிலும் புகார் அளித்துள்ளேன். அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளேன் என்றார் கயல் சந்திரன்.