14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
விக்ரம் பிரபு, நிக்கி கல்ரானி, பிந்து மாதவி, சூரி மற்றும் பலர் நடிக்கும் 'பக்கா' படத்தின் டீசர் வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. விழாவில் படத்தின் கதாநாயகன் விக்ரம் பிரபு கலந்து கொள்ளவில்லை. அவருக்காக வெகு நேரம் படக்குழுவினர் காத்திருந்தார்கள். அவர் டிராபிக்கில் மாட்டிக் கொண்டார், வந்து கொண்டிருக்கிறார், வந்துவிடுவார் என்று பேசிக் கொண்டார்கள். ஆனால், கடைசியில் அவர் இல்லாமலேயே நிகழ்ச்சி ஆரம்பமானது. அதன் பிறகாவது அவர் வருவார் என்று எதிர்பார்த்திருந்தார்கள். அவர் கடைசி வரை வரவேயில்லை.
நிகழ்ச்சியில் பேசிய படத்தின் நாயகி நிக்கி கல்ரானி, விக்ரம் பிரபுவின் ஷுட்டிங் முடிய நேரமாகிவிட்டதால் வர முடியவில்லை என எனக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார் என்று மொபைல் போனிலிருந்து படித்தார். அதில் படத்தின் இசையமைப்பாளரைப் பற்றியும், நிகழ்ச்சிக்கு வர முடியாததால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் மட்டுமே கூறியிருந்தார்.
பொதுவாக, இது போன்ற நிகழ்ச்சிகளில் படத்தின் நாயகிகள் தான் வர மாட்டார்கள். அதைப் பற்றி யாரும் கவலைப்படவும் மாட்டார்கள். படத்தின் நாயகன் இல்லாமல் எந்த விழாவும் நடைபெறாது. அவரிடம் ஒப்புதல் வாங்கிய பிறகுதான் விழாவையே நடத்துவார்கள்.
'பக்கா' விழாவிலும் விக்ரம் பிரபுவிடம் ஒப்புதல் வாங்கியிருந்தும் அவர் வராதது அன்று சலசலப்பை ஏற்படுத்தியது. விசாரித்துப் பார்த்ததில் படத்தில் தயாரிப்பாளர் சிவகுமார் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளாராம். அதன் காரணமாக படப்பிடிப்பு சமயத்திலேயே விக்ரம் பிரபு கருத்து வேறுபாடு கொண்டிருந்தார் என்கிறார்கள். அதனால் தான் அவர் நிகழ்ச்சிக்கு வரவில்லையாம். இனிமேலும், அவர் 'பக்கா' படத்தின் பிரமோஷனுக்கு வருவாரா என்பது சந்தேகம் என்கிறார்கள்.