ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை ரோஜா, சென்னை வளசரவாக்கத்தில் தனது கணவர் ஆர்.கே.செல்மணி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். ஆந்திராவைச் சேர்ந்த ரோஜாவுக்கு ஐதராபாத் மணிகொண்டா பகுதியில் சொந்த வீடு இருக்கிறது. தற்போது அவர் நகரி தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பதால் இந்த வீட்டையும் அவர் பயன்படுத்தி வந்தார்.
பொங்கல் பண்டிகைக்காக சென்னை வந்தவர் 10 நாட்களுக்கு பிறகு நேற்று குடும்பத்துடன் ஐதராபாத் வீட்டுக்குச் சென்றார். வீட்டை பார்த்தவர் அதிர்ச்சி அடைந்தார். வீட்டு பூட்டுகள் உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த பணம், நகைகளை யாரோ திருடிச் சென்றிருக்கிறார்கள். அவற்றின் மதிப்பு 10 லட்சம்.
தனது வீட்டில் திருட்டுப்போனது குறித்து நடிகை ரோஜா மாதாபூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டில் இரண்டு வேலைக்காரர்கள் உள்ளனர். அவர்களுக்கு தெரியாமல் இது நடந்திருக்க வாய்பில்லை. அவர்களும் தகவல் தெரிவிக்கவில்லை எனவே வேலைக்காரர்கள் மீது சந்தேகம் இருப்பதாக ரோஜா போலீசிடம் தெரிவித்திருக்கிறார். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.