சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி |
நடிகை ரோஜா, சென்னை வளசரவாக்கத்தில் தனது கணவர் ஆர்.கே.செல்மணி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். ஆந்திராவைச் சேர்ந்த ரோஜாவுக்கு ஐதராபாத் மணிகொண்டா பகுதியில் சொந்த வீடு இருக்கிறது. தற்போது அவர் நகரி தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பதால் இந்த வீட்டையும் அவர் பயன்படுத்தி வந்தார்.
பொங்கல் பண்டிகைக்காக சென்னை வந்தவர் 10 நாட்களுக்கு பிறகு நேற்று குடும்பத்துடன் ஐதராபாத் வீட்டுக்குச் சென்றார். வீட்டை பார்த்தவர் அதிர்ச்சி அடைந்தார். வீட்டு பூட்டுகள் உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த பணம், நகைகளை யாரோ திருடிச் சென்றிருக்கிறார்கள். அவற்றின் மதிப்பு 10 லட்சம்.
தனது வீட்டில் திருட்டுப்போனது குறித்து நடிகை ரோஜா மாதாபூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டில் இரண்டு வேலைக்காரர்கள் உள்ளனர். அவர்களுக்கு தெரியாமல் இது நடந்திருக்க வாய்பில்லை. அவர்களும் தகவல் தெரிவிக்கவில்லை எனவே வேலைக்காரர்கள் மீது சந்தேகம் இருப்பதாக ரோஜா போலீசிடம் தெரிவித்திருக்கிறார். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.