விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
கயல் படத்தின் மூலம் அறிமுகமானவர் சந்திரன், அதன் பிறகு ரூபாய் படத்தில் நடித்தார். தற்போது கிரகணம், திட்டம்போடுற திருடுற கூட்டம், பார்ட்டி படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கயல் சந்திரன் மீது தயாரிப்பாளர் ஒருவர் 5 கோடி ரூபாய் மோசடி புகார் கொடுத்துள்ளார். தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் தி.நகரைச் சேர்ந்த பிரபு வெங்கடாசலம். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் நேற்று ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
நான் ஒரு சினிமா தயாரிப்பாளர் 2 படங்களை தயாரித்துள்ளேன். கயல் படத்தில் ஹீரோவாக நடித்த சந்திரன் மற்றும் ரகுநந்தன் ஆகியோர் என்னை சந்தித்து திட்டம்போட்டு திருடுற கூட்டம் என்ற படத்தை தயாரிக்கிறோம். அதில் நீங்களும் பங்கேற்க வேண்டும் என்றார்கள். அதற்கு நான் ஒப்புக் கொண்டு 5 கோடி பணம் கொடுத்து அந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் ஆனேன். 2 மூவி பப்ஸ், அக்ராஸ் பிலிம்ஸ் என்ற நிறுவனங்களை தொடங்கி அந்தப் படத்தை தயாரித்தோம்.
ஆனால் தற்போது என்னை அந்த படத்தின் தயாரிப்பாளர் என்கிற தகுதியில் இருந்து நீக்கம் செய்து விட்டனர். கடந்த ஒரு வருடமாக நான் கொடுத்த பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றி வருகிறார்கள். தற்போது படத்தை வெளியிட இருக்கிறார்கள். எனவே இது தொடர்பாக கயல் சந்திரன் மற்றும் ரகுநந்தன் மீது சட்ட நடவடிக்கை எடுத்து எனது பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவித்திருக்கிறார்.