ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் இந்தியில் உருவாகியுள்ள படம் பத்மாவத். தீபிகா படுகோனே, ரன்பீர்சிங், ஷாகித் கபூர் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தில் பத்மாவதியை தவறாக சித்தரித்து உள்ளதாக கூறி, ராஜ்புத்ர சமூகத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனால் இந்த படத்தை வெளியிட சில மாநிலங்கள் தடை விதித்தது. இப்படி சில மாதங்களாக தடை தாமதங்கள் நீடித்து வந்த நிலையில், தற்போது பத்மாவத் படத்தை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதோடு, பத்மாவத் படத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ள மாநிலங்களில் தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால் ஜனவரி 25-ந்தேதி அப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதோடு அதே தேதியில் வெளியாகயிருந்த அக்சய்குமாரின் பேட்மேன் படத்தை வேறு தேதியில் வெளியிட்டு தங்கள் படம் வெற்றி பெற உதவுமாறும் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி கேட்டுக்கொண்டார்.
அதையடுத்து, தனது பேட்மேன் படத்தின் ரிலீஸ் தேதியை பிப்ரவரி 9-ந் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார் அக்சய்குமார். தங்களது வேண்டுகோளை ஏற்று பேட்மேன் ரிலீஸ் தேதியை மாற்றி வைத்த அக்சய்குமாருக்கு இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, வாழ்நாள் முழுக்க நன்றிக்கடன் பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.