ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தலைப்பைப் பார்த்து குழம்பிப் போயுள்ளவர்களுக்கு இடையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஏன் அப்படி சொன்னார் என்பது விஜய் ரசிகர்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாவதை முன்னிட்டு, படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் நேற்று அவருடைய டுவிட்டரில், படத்தின் துவக்கத்தைப் பற்றியும், எப்போது படம் வெளியாகப் போகிறது என்பதைப் பற்றியும் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவருடைய டுவிட்டரில் 'இனிய தீபாவளி வாழ்த்துகள் தோழர்களே' எனக் குறிப்பிட்டதும் அதை விஜய் ரசிகர்களும், ஏன் அஜித் ரசிகர்களும் கூட உடனடியாகப் புரிந்து கொண்டார்கள்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் விஜய், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் ஆரம்பமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படம் வெளிவரும் தீபாவளி தினத்தில்தான் அஜித் நடிக்க உள்ள 'விஸ்வாசம்' படமும் வெளிவரப் போகிறது. செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படமும் வரப் போகிறது. அதனால், இந்த வருடத் தீபாவளிக்கு மோதல் கடுமையாகவே இருக்கும்.