ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
லிங்குசாமி இயக்கி விஷால் நடித்த சண்டக்கோழி படம் பெரிய வெற்றி அடைந்தது. விஷாலை ஆக்ஷன் ஹீரோவாக்கிய படம் அது. அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகி வருகிறது. லிங்குசாமி இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். யுவன் இசை அமைக்கிறார்.
இதன் முதல் கட்ட படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கியது. விமான நிலையம் எதிரில் உள்ள பின்னி மில்லில் மதுரை நகரின் கடைவீதி, கோவில், மார்க்கெட் போன்றவை செட் போடப்பட்டு படமாக்கப்பட்டது. இடையில் வந்த தியேட்டர் வரி விதிப்பு பிரச்சினை, திரையுலக போராட்டம், பைனான்சியர் அன்பு செழியன் பிரச்சினைகள் காரணமாக அவ்வப்போது தடைபட்டு வந்த படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்திருக்கிறது. சுமார் 30 நாட்கள் இங்கு படப்பிடிப்பு நடந்துள்ளது.
இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் வருகிற 22ந் தேதி முதல் திண்டுக்கல் பகுதியில் நடைபெற இருப்பதாக தயாரிப்பு வட்டாரம் தெரிவிக்கிறது. கொடைக்கானல் பகுதியில் பாடல் காட்சிகள் படமாக்கப்டுகிறது. இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் 20 நாட்கள் வரை நடக்கும் என்று தெரிகிறது. இதனை விஷால் பிலிம் பேக்டரி தயாரித்து வருகிறது.