ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
மாரி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. தனுஷ், சாய் பல்லவி, கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடிக்க, பாலாஜி மோகன் இயக்குகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷ் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் துவங்கி உள்ள நிலையில், படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றை இளையராஜா பாடியிருக்கிறார்.
இதை தனுஷ் தன் டுவிட்டரில், "மாரி 2 படத்தில் இளையராஜா பாடியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு தெய்வீக அனுபவம் கிடைத்த உணர்வு ஏற்பட்டது, எங்கள் குழு ஆசீர்வதிக்கப்பட்டதாக உணருகிறேன்" என பகிர்ந்துள்ளார்.