ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இன்றைய இளம் இயக்குநர்களில் தமிழ் உணர்வும் சமுதாய சிந்தனையும் மேலோங்கியவர்களில் முக்கியமானவர் சுசீந்திரன். இவரது இயக்கத்தில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் 'ஏஞ்சலினா'. இந்த படத்தை தொடர்ந்து இயக்கும் அடுத்த படத்திற்கு 'ஜீனியஸ்' என்று பெயரிட்டுள்ளார் சுசீந்திரன்!
படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வரும் இந்த படத்தில் முற்றிலும் புதுமுக நடிகர்களே நடிக்கின்றனர். ''இன்றைய சமுதாய சூழ்நிலையில் குழந்தைகளுக்கு கல்வியை நாம் திணிப்பதால் அவர்கள் எந்த அளவுக்கு மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள், அப்படி மன அழுத்தத்திற்கு ஆளான ஒருவன், அவன் மனநிலை, அவன் வாழ்க்கை என ஒரு கதாபாத்திரத்தை சுற்றி இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளேன். இத்திரைப்படம் தமிழ் சினிமாவில் முக்கியமான பதிவாக இருக்கும்'' என்று குறிப்பிட்டுள்ளார் சுசீந்திரன்.
நெஞ்சில் துணிவிருந்தால் படத்துக்கு முதலில் அறம் செய்து பழகு, என்று தலைப்பு வைத்த சுசீந்திரன் ஏற்கனவே இயக்கிய படங்களுக்கு எல்லாம் அழகு தமிழில்தான் பெயர் சூட்டிவந்தார். நெஞ்சில் துணிவிருந்தால் படத்துக்கு கிடைத்த தோல்வியினாலோ என்னவோ.. தற்போது ஏஞ்சலினா, ஜீனியஸ் என்று ஆங்கிலத் தலைப்புக்கு மாறிவிட்டார்.