ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கம் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட். இந்த நிறுவனம் தற்போது தமிழ் படத் தயாரிப்பில் தீவிரமாக இறங்கியிருக்கிறது. தமிழில் இறுதிசுற்று, விக்ரம் வேதா உள்ளிட்ட பல படங்களை தயாரித்த முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஒய் நாட் ஸ்டூடியோ, கபாலி, தெறி உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட படங்களை வாங்கி விநியோகித்த ஏ.வி.இண்டர்நேஷனல் நிறுவனங்களுடன் இணைந்து பல தமிழ் படங்களை தொடர்ச்சியாக தயாரிக்க இருக்கிறது ரிலையன்ஸ்.
இதுகுறித்து ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் ஷிபாசிஷ் சர்கார் கூறியதாவது: இந்தக் கூட்டணியின் மூலமாக ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் தென்னிந்தியாவில் தங்களின் பங்கு தரமான திரைப்படங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், அதீதமாகவும் இருக்கும். புதிய உத்வேகத்துடன் புதுமைகளை புகுத்தி திரைப்படங்களின் மேன்மைக்கு வழிவகுக்கும் இந்த உன்னதமான கூட்டணி. என்றார்.
ஒய்நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் கூறுகையில், "எங்கள் நிறுவனம் சஞ்சய் வத்வாவின் ஏபி இண்டர்நேஷனல் மற்றும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்களுடன் இணைவது பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. இந்தக் கூட்டணியின் மூலம் ஒய்நாட் ஸ்டுடியோஸின் படங்களும் செயல்திறனும் சர்வதேச நிலைக்கு இட்டுச் செல்லும் என்று உளமார நம்புகிறோம்" என்றார்.