14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் தேசிய திரைப்பட அகாடமி வழங்கும் 2018ம் ஆண்டு விருதுக்கான போட்டியில் சிறந்த துணை நடிகர் விருதுக்கு 'மெர்சல்' படத்திற்காக விஜய் போட்டியாளர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். அதோடு, 'மெர்சல்' திரைப்படமும் சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான போட்டியில் இடம் பிடித்துள்ளது.
சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான போட்டியில் 'மெர்சல்' படத்துடன் பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி, ஸ்வீடன், சிலி, தென்னாப்பிரிக்கா, லெபனான ஆகிய நாடுகளின் படங்களும் போட்டியிடுகின்றன. போட்டியாளர்களில் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆன்லைன் வாக்குப்பதிவு நேற்று முதல் ஆரம்பமானது. வரும் 20ம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
விருது பெற்றவர்களின் விவரம் மார்ச் மாதம் 28ம் தேதி நடைபெற உள்ள தேசிய திரைப்பட விருதுகள் 2018 விழாவில் அறிவிக்கப்பட உள்ளது.
தேசிய திரைப்பட அகாடமி 1999ம் ஆண்டு அமைக்கப்பட்டது. திரையுலகத்தினருக்கான வளர்ச்சியில் அந்த அமைப்பு ஈடுபடுகிறது. பல திரைப்பட விழாக்கள், காட்சிகள், மாநாடுகள், பயிற்சி வகுப்புகள் ஆகியவற்றை இந்த அமைப்பு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடத்தி வருகிறது.