ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ஹீரோயிசத்தை மனதில் கொள்ளாமல் கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முதலிடம் கொடுக்கக்கூடியவர் விஜயசேதுபதி. அதோடு பாசிட்டீவ், நெகடீவ் என கலந்து நடித்து வருபவர், தற்போது மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் மல்டி ஹீரோ கதையில் நடிக்கிறார். சிம்பு, விஜயசேதுபதி, ஜோதிகா, பகத்பாசில் நடிக்கும் இந்த படத்தில் விஜய சேதுபதிக்கு மணிரத்னம் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த படத்தில் விஜய்சேதுபதி ஒரு போலீஸ் வேடத்தில் நடிப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே சேதுபதி என்ற படத்தில் போலீசாக நடித்து கலக்கியவர் விஜயசேதுபதி. அதன்பிறகு விக்ரம் வேதா படத்தில் போலீசாக நடித்த மாதவனுடன் வேதா என்கிற ரவுடியாக மோதினார். அப்படிப்பட்ட விஜயசேதுபதி மணிரத்னம் இயக்கும் படத்தில் நல்ல போலீசாக நடிக்கிறாரா? இல்லை கெட்ட போலீசாக நடிக்கிறாரா? என்பது சஸ்பென்சாக உள்ளது.