ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அட்லீ இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் விஜய், நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா மற்றும் பலர் நடித்த மெர்சல் படம் 2017ம் வருடம் அக்டோபர் 28ம் தேதி வெளியானது. படம் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பி அதிகப்படியான வசூலை அள்ளி ஆரம்பித்தது. தமிழ்நாட்டில் மட்டும் 125 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்ற படம், தமிழ்நாடு தவிர மற்ற இடங்களில் சுமார் 125 கோடி வரை வசூலைப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சுமார் 40 கோடி ரூபாயும், இந்தியாவின் பிற மாநிலங்களில் சுமார் 3 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் சுமார் 82 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாம். இதில் அதிக பட்சமாக மலேசியாவில் 19 கோடியும், அமெரிக்காவில் 12 கோடியும் வசூலித்திருக்கிறது. படத்தை வாங்கிய அனைவருக்குமே மெர்சல் படம் பெரிய லாபத்தைக் கொடுத்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
படம் வெளியாகி 85 நாட்கள் முடிவடைய உள்ள நிலையில் மெர்சல் படம் பொங்கலுக்கு டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த டிவி ஒளிபரப்பு உரிமை மட்டும் சுமார் 25 கோடி ரூபாய் வரை விற்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். மேலும், டிஜிட்டல் உரிமை, மற்ற உரிமைகள் என மொத்தமாக மெர்சல் படம் மூலம் நடந்த வியாபாரம் 300 கோடியைத் தாண்டியிருக்கும் என்பது மட்டும் உறுதி. ஆனால், தமிழ் சினிமாவில் எந்த ஒரு தயாரிப்பாளரும் அவர்களது வியாபார வரவைப் பற்றி வெளியில் சொல்வதில்லை.