ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பலூன் படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பரவலாக நடித்து வருகிறார் அஞ்சலி. இதில் காண்பது பொய் என்ற படத்தில் லீடு ரோலில் நடிப்பவர், அடுத்தபடியாக கதையின் நாயகியாக நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அதோடு, தற்போது தெலுங்கில் அஞ்சலியின் மார்க்கெட் ஸ்டெடியாக இருப்பதால், தெலுங்கு வியாபாரத்தையும் கருத்தில் கொண்டு படம் இயக்குபவர்கள் அஞ்சலியை தங்கள் படங்களில் இணைப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
அந்த வகையில், ஜெய்யுடன் நடித்த பலூன் படத்தை அடுத்து தற்போது விஜய் ஆண்டனி நடிக்கும் காளி படத்திலும் இணைந்திருக்கிறார் அஞ்சலி. கிருத்திகா உதயநிதி இயக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் சுனைனா, அமிர்தா போன்ற நடிகைகள் தான் லீடு ரோலில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தனர். பின்னர் அஞ்சலியை இந்த படத்திற்கு ஒப்பந்தம் செய்தனர்.
விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் தெலுங்கில் பெரிய அளவில் வசூலித்ததை அடுத்து அவர் நடிக்கும் தமிழ்ப்படங்கள் தெலுங்கில் டப்பாகி வருகிறது. இந்த நிலையில், காளி படத்தையும் தெலுங்கில் வெளியிடுகிறார்கள். அதனால், தெலுங்கில் மார்க்கெட்டில் இருக்கும் ஒரு நடிகை முக்கிய ரோலில் நடித்தால் படத்தின் வியாபாரத்திற்கு பலமாக இருக்கும் என்பதால் இப்போது அஞ்சலியின் கேரக்டரை வலுவானதாக மாற்றியுள்ளார்களாம்.