விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
கதையின் நாயகியாக நடிக்கத் தொடங்கிய பிறகு பிரபல ஹீரோக்களுடன் நடிக்கும் படங்களுக்கு புதிய நிபந்தனைகளை விதித்து வருகிறார் நயன்தாரா. அதாவது, முன்பு நடித்தது போன்று ஹீரோக்களுடன் அதிகப்படியான நெருக்கமாக நடிக்க மாட்டேன். அளவுக்கதிகமான ஆடைக்குறைப்பு செய்ய மாட்டேன் என்று டைரக்டர்கள் தன்னிடம் கதை சொல்லும்போதே தனது சார்பில் கண்டிசன் போட்டு விடுகிறார்.
அந்த வகையில், தெலுங்கில் தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள ஜெய்சிம்ஹா படம் திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தில் இதற்கு முன்பு தெலுங்கில் நடித்த படங்களைப்போன்று பாடல் காட்சிகளில் கிளாமர் மட்டுமின்றி, நெருக்கம் காட்டாமலும் நடித்திருக்கிறார் நயன்தாரா.
அதோடு, இந்த ஜெய் சிம்ஹா படத்தில் வழக்கமான கதாநாயகியாக நடிக்க நயன்தாரா ஆர்வம் இல்லாமல் இருந்தபோதும், கே.எஸ்.ரவிக்குமார் கேட்டுக் கொண்டதால் இப்படத்தில் கமிட்டானாராம் நயன்தாரா.