ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
பிரபல மலையாள இயக்குனர் எம்.ஏ.நிஷாந்த் இயக்கி வரும் தமிழ் படம் "கேணி". தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகும் இந்தப் படத்தில் ஜெயப்பிரதா, ரேவதி, ரேகா, அர்ச்சனா, அனுஹாசன் என 5 மாஜி ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர பார்த்திபன், நாசர், எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய் உள்பட பலர் நடிக்கிறார்கள். எம்.ஜெயச்சந்திரன் இசை அமைக்கிறார், படம் பற்றி இயக்குனர் எம்.ஏ.நிஷாந்த் கூறியதாவது:
மம்முட்டி, பிருத்விராஜ், சுரேஷ் கோபி நடித்துள்ள 7 மலையாளப் படங்களை இயக்கி உள்ளேன். கேணி தமிழ், மலையாள மொழிகளில் தயாராகி வருகிறது. நான் இயக்கும் படங்கள் சமூக பிரச்சினைகளை மையமாக கொண்டு இருக்கும். இந்தப் படமும் அப்படித்தான். காற்றைப்போல நீரும் மக்களுக்கு பொதுவானது. அதை உரிமை கொண்டாடவும், அணைகள் கட்டி தடுக்கவும் யாருக்கும் உரிமை இல்லை. இதை துணிச்சலாக படத்தில் பேசியிருக்கிறேன். தமிழ்நாடு, கேரளா மாநில எல்லை கிராமங்கள் தான் கதை களம். என்றார் நிஷாந்த்.