சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
விக்ரம் நடிக்க சுமார் 3௦௦ கோடி ரூபாய் பட்ஜெட்டில் 'மஹாவீர் கர்ணா' என்கிற படம் இந்தியில் தயாராகவுள்ளது. மலையாளத்தில் பிருத்விராஜை வைத்து 'என்னு நிண்டே மொய்தீன்' என்கிற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த ஆர்.எஸ்.விமல் தான் இந்தப்படத்தை இயக்குகிறார்.
முதலில் பிருத்விராஜை வைத்து மலையாளத்தில் இந்தப்படம் தயாராக இருந்தநிலையில் அது கைவிடப்பட்டு, தற்போது விக்ரமின் கைகளுக்கு வந்து சேர்ந்துள்ளது. இந்த கதையை பற்றி விக்ரமிடம் போனில் விமல் பேசியபோது, ஏற்கனவே நடிகர் திலகம் சிவாஜி, கர்ணன் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.. அதை தாண்டி இதில் என்ன வித்தியாசம் காட்டிவிட முடியும் என சந்தேகம் கேட்டாராம் விக்ரம்.
உடனே சென்னைக்கு கிளம்பிவந்த இயக்குனர் விமல், விக்ரமை நேரில் சந்தித்து, தான் கடந்த மூன்று வருடங்களாக 'கர்ணன்' குறித்து செய்துவந்த ஆராய்ச்சிகளையும், தனது திரைக்கதை பாணியையும் விரிவாக விவரித்தாராம். இது முற்றிலும் புதிய 'கர்ணன்' ஆக இருப்பதாக விக்ரமுக்கு நம்பிக்கை கிடைக்கவே, அதன்பின் தான் இதில் நடிக்கவே ஒப்புக்கொண்டாராம் விக்ரம்.