ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கவிஞர் வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் குறித்த கருத்தரங்கில் பங்கேற்றார். அப்போது அவர் பேசிய சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியாக அங்குள்ளவர்கள் கருதினார்கள். வைரமுத்துவின் இந்த கருத்து, இந்து மதத்தை அவமதித்து விட்டதாக ஹெச் ராஜா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார் வைரமுத்து.
இதுகுறித்து வைரமுத்து தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது.... தமிழை ஆண்டாள் என்ற எனது கட்டுரையில் அமெரிக்க இண்டியானா பல்கலைக்கழகத்தின் ஆய்வு நூலில் சொல்லப்பட்டிருந்த ஒரு வரியைத் தான் நான் மேற்கோள் காட்டியிருந்தேன், அது எனது கருத்தன்று. ஓர் ஆய்வாளரின் தனிக்கருத்து.
ஆளுமைகளை மேன்மைப்படுத்துவதே இலக்கியத்தின் நோக்கமேயன்றி சிறுமை செய்வதன்று. அதற்கு இலக்கியமே தேவையில்லை. ஆண்டாளைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் என் கருத்துக்களெல்லாம் ஆண்டாளின் பெருமைகளையே பேசுகின்றன என்பதை அனைவரும் அறிவர்.
எவரையும் புண்படுத்துவது என் நோக்கமன்று; புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்.
இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.