ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
2018ம் ஆண்டு பொங்கல் சிறப்பு தினம் தமிழ் சினிமாவுக்கு ஒரு அமோக ஆரம்பத்தைத் தரப் போகிறது என்று பத்து நாட்களுக்கு முன்பு பலரும் நினைத்திருந்தார்கள். ஆனால், கடைசி நேரப் போட்டியில் களத்தில் குதித்த ஸ்கெட்ச் படத்தால் எப்போதே பொங்கல் வெளியீடு என்று அறிவிக்கப்பட்டு வந்த படங்கள் தள்ளிப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது.
மதுர வீரன், பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய இரண்டு படங்களும் டிசம்பர் மாதத்திலிருந்தே பொங்கலுக்கு வெளியிடுகிறோம் என தொடர்ச்சியாக அறிவித்து வந்தார்கள். பாஸ்கர் ஒரு ராஸ்கல் பழைய பஞ்சாயத்து ஒன்றில் சிக்கிக் கொண்டதால் கடைசி நிமிடத்திலிருந்து போட்டியில் விலகிவிட்டது.
ஸ்கெட்ச் படம் களத்தில் குதித்ததால் மதுர வீரன் படத்திற்கும், மன்னர் வகையறா படத்திற்கும் தேவையான, சரியான தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால், அவர்களும் தள்ளி வரலாம் என முடிவெடுத்து பொங்கல் வெளியீடு என்பதை ஜனவரி வெளியீடு என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். ஜல்லிக்கட்டை மையப்படுத்திய இந்தப் படம் பொங்கலுக்கு வருவதுதான் பொருத்தமானது. முன்னாள் நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் மகன் நடித்த ஒரு படத்திற்கா இந்த நிலை என கோலிவுட்டில் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
மன்னர் வகையறா படத்திற்காக விமல் வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்தும் அவருடைய படத்திற்குத் தியேட்டர்கள் அதிகம் கிடைக்கவில்லை. அதனால், அவரும் போட்டியிலிருந்து விலக வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது.
கடைசியில் பொங்கலுக்கு தானா சேர்ந்த கூட்டம், குலேபகாவலி, ஸ்கெட்ச் ஆகிய படங்கள் மட்டுமே வெளிவர உள்ளது. படத்தை எடுப்பதை விட படத்தை வெளியிடுவதுதான் சிரமம் என்பதை 2018ம் ஆண்டின் ஆரம்பமே மீண்டும் உணர்த்திவிட்டது.