ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாண்டியராஜன் இயக்கிய ஆண்பாவம் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் கொல்லங்குடி கருப்பாயி. அதன்பிறகு சில படங்களில் நடித்தார். சினிமாவில் பல பாடல்களையும் பாடியுள்ளார். சினிமாவை விட ஏராளமான நாட்டுப்புற பாடல்களை பாடியிருக்கிறார். தற்போது சினிமாவில் இருந்து விலகி வாழ்ந்து வருகிறார்.
சென்னை லயோலா கல்லூரி மாணவர் அரவணைப்பு மையம், மாற்று ஊடக மையம், ஓன்.ஜி.ஜி.சி ஆகியவை இணைந்து நாட்டுப்புற கலைஞர்களை கவுரவிக்கும் விழா ஒன்றை நடத்தியது. இதில் கலந்து கொள்ள வந்திருந்த கொல்லங்குடி கருப்பாயி நிருபர்களிடம் கூறியதாவது:
குறைவான சினிமாவில் நடித்திருக்கிறேன். சினிமாவில் குறைவாகத்தான் பாடியிருக்கிறேன். ஆனால் நாட்டுப்புற பாடல்களை மேடை தோறும் பாடிவந்தேன். சினிமாவால் நல்ல புகழ் கிடைத்தது. ஆனால் சினிமாவில் கிடைத்த வருமானம் போதவில்லை. அன்றாட செலவுகளுக்கே சினிமா வருமானம் பயன்பட்டது. இப்போது அதுவும் இல்லை. தம்பி விஷால் ஏற்பாட்டில் நடிகர் சங்கம் மாதம் 4 ஆயிரம் உதவித் தொகை வழங்கி வருகிறது. அதை வைத்து வாழ்ந்து வருகிறேன்.
நான் குடியிருக்கும் வீடு எப்போது இடிந்து விழுமோ என்கிற நிலையில் இருக்கிறது. அதனால் உயிர் பயத்துடனும், அச்சத்துடனும் வாழ்ந்து வருகிறேன். எனது தூரத்து சொந்தத்திலிருந்து ஒரு பேத்தி என்னை பராமரித்து வருகிறார். எல்லோரும் சினிமாகாரர்களிடம் உதவி கேட்க சொல்கிறார்கள். நான் யாரிடமும் இதுவரை உதவி கேட்கவில்லை. இனி கேட்கவும் மாட்டேன். என்றார் கொல்லங்குடி கருப்பாயி.