ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கமல்ஹாசன் கடந்த வாரம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்தும், அதில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன் குறித்தும் கடும் விமர்சனங்கள் செய்திருந்தார். இதனால் கமல்ஹாசனுக்கு எதிராக தினகரன் ஆதரவாளர்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அவரது உருவ பொம்மைகளை எரித்து வருகிறார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கமல் ரசிகர்கள் தினகரனுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அனுமதி இல்லாமல் இதுபோன்று போராட்டம் நடத்தும் ரசிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமல் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் எழுதியிருப்பதாவது:
கலந்தாலோசிக்காது நமது இயக்கத்தார் மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடைஞ்சலாக ஆர்ப்பாட்டங்களில் இறங்கலாகாது. விதிமுறைகளை மதியாத இயக்கத் தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நிலையை தலைமைக்கு தயவாய் ஏற்படுத்தாதீர்கள். ஆக்கபூர்வமான வேலைகள் நிறைய இருக்கின்றன.
இவ்வாறு கமல் கூறியுள்ளார்.