ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் துவக்கவிழா ஜனவரி 1-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தில் 'பிரேமம்' மலையாளப் படத்தில் நடித்து புகழ்பெற்ற சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்று ஏற்கெனவே அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.
இந்நிலையில், இன்னொரு கதாநாயகியாக ரகுல் ப்ரீத் சிங்கும் நடிக்க இருக்கிறார் என்ற தகவலை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர். கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்த ரகுல் ப்ரீத் சிங்குக்கு 1 கோடி சம்பளம் கொடுத்தனர். காரணம் தெலுங்கு ரைட்ஸ் பிசினஸ் பண்ண ரகுல் ப்ரீத் சிங் படத்தில் இருந்தது பெரிதும் உதவியது.
அதே கான்செப்ட்டில் தான் தற்போது சூர்யா நடிக்கும் படத்திலும் ரகுல் ப்ரீத் சிங்கை கதாநாயகியாக்கியுள்ளனர். தற்போதைய தகவலின்படி, படத்தில் ரகுல் ப்ரீத் சிங்குக்குத்தான் முக்கியத்துவமாம். சாய்பல்லவிக்கு ப்ளாஷ்பேக்கில் வரும் கேரக்டர் என்கிறார்கள். இதனால் சாய் பல்லவி அப்செட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.