ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தை மிகத் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இதில் உள்ளாட்சி அமைப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி, நகராட்சிகள் தூய்மை இந்தியா திட்டத்திற்கு செலிபிரிட்டிகளை தூதர்களாக நியமித்து பணியாற்றி வருகிறது. தமிழ்நாட்டின் தூய்மை இந்தியா திட்ட தூதராக கமல்ஹாசனை மத்திய அரசு நியமித்தது.
இதே போல திண்டுக்கல் மாநகராட்சி திண்டுக்கல் பகுதி தூய்மை இந்தியா திட்ட தூதராக நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான சசிகுமாரை நியமித்துள்ளது. இதற்கான அறிமுக விழா நடந்தது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் டி.ஜி.விநய், சசிகுமாரை திண்டுக்கல் மாவட்ட தூய்மை இந்தியா திட்ட தூதராக அறிமுகப்படுத்தினார். மாநகராட்சி கமிஷனர் மனோகர், தூய்மை இந்திய திட்ட அலுவலர் அனிதா உள்பட பலர் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் சசிகுமார் பேசியதாவது:
திண்டுக்கல் மாநகராட்சியின் தூய்மை தூதுவர் நான் மட்டும் கிடையாது. மக்கள் அனைவருமே தூய்மை தூதுவர்கள் தான். நகரை சுகாதாரமாக வைத்து கொள்வதற்கு ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது. மக்கும் குப்பை, மக்காத குப்பை எதுவென்று குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லி கொடுக்க வேண்டும். அதனை தனித்தனியாக பிரித்து துப்புரவு தொழிலாளர்களிடம் வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு பெற்றோர் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். எனது சொந்த ஊர் மதுரை என்றாலும், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தான் பள்ளி படிப்பை முடித்தேன். இதனால், திண்டுக்கல்லுக்கு வந்தது சந்தோஷமாக உள்ளது. துப்புரவு தொழிலாளர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன். ஏனென்றால், இருப்பதிலேயே மிகவும் கடினமான பணி துப்புரவு பணிதான். இவ்வாறு அவர் கூறினார்.