ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
இயக்குனர் லிங்குசாமி அவருடைய தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் மூலம் 4 படங்களைத் தயாரிக்க உள்ளார். இது பற்றிய தகவலை அந்த நான்கு படங்களில் ஒரு படத்தின் இயக்குனரான சீனு ராமசாமி வெளியிட்டுள்ளார்.
“திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நான்கு படங்களில் நானும் ஒரு படம் இயக்க வாய்ப்பு கிடைத்தமைக்கு மகிழ்ச்சி அறிவிப்பு விரைவில்... இடம் பொருள் ஏவல் விரைவில்....” என சீனு ராமசாமி அவருடைய டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத் தயாரிப்பில் வெளிவந்த அஞ்சான், உத்தம வில்லன் ஆகிய இரண்டு படங்களின் படுதோல்வி அந்த நிறுவனத்தைப் பெரிதும் பாதித்தது. அவர்கள் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி முடிந்த இடம் பொருள் ஏவல் படத்தை வெளியிடாமல் நிறுத்திவிட்டனர். மேலும் அவர்கள் தயாரித்து வந்த ரா ரா ராஜசேகர், நான்தான் சிவா ஆகிய படங்களும் நிறுத்தப்பட்டன.
சிவகார்த்திகேயனை வைத்து அவர்கள் தயாரித்த ரஜினி முருகன் படத்தை மட்டும் பல பஞ்சாயத்துக்களுக்கிடையில் எப்படியோ வெளியிட்டு லாபத்தையும் பார்த்தனர். அந்த லாபத்தை அவர்களது முந்தைய கடன்களில் வரவு வைத்துவிட்டனர்.
இயக்குனர் லிங்குசாமி தற்போது சண்டக் கோழி 2 படத்தை இயக்கி வருகிறார். இதனிடையே, லிங்குசாமி மீண்டும் நான்கு படங்களைத் தயாரிக்க உள்ளார் என சீனு ராமசாமி சொல்லியுள்ள தகவல் நின்று போன பழைய படங்களையும் சேர்த்தா என்பது தெரியவில்லை. விரைவில் இது பற்றிய விரிவான அறிவிப்பு வெளியாகலாம்.