ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்கள் தான் அவரை 'தலைவா' என்றும் 'சூப்பர்ஸ்டார்' என்றும் உணர்ச்சிபூர்வமாய் அழைத்துக் கொள்வார்கள். ஆனால், ஒரு நாட்டின் பிரதமர் அவரை 'தலைவா' என அழைத்து ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். மலேசிய நாட்டின் பிரதமர் முகம்மது நஜிப் துன் ரசாக் அவருடைய டுவிட்டர் பதிவில் ரஜினிகாந்தைச் சந்தித்தது பற்றி அப்படித்தான் குறிப்பிட்டுள்ளார்.
“தலைவா ரஜினிகாந்தை இன்று மீண்டும் சந்தித்தது சிறப்பானது, இந்த முறை மலேசியாவில், உங்கள் நேரத்தை நன்றாகச் செலவழியுங்கள்” என ரஜினிகாந்தின் சந்திப்பு பற்றி அவர் பதிவிட்டுள்ளார்.
கடந்த வருடம் சென்னை வந்திருந்த போது மலேசியப் பிரதமர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துப் பேசினார். நேற்று மலேசியாவில் மீண்டும் சந்தித்திருக்கிறார்கள். ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படம் பெரும்பாலும் மலேசியாவில்தான் படமாக்கப்பட்டது.
நடிகர் சங்கம் நடத்தும் கலை நிகழ்ச்சிக்காக ரஜினிகாந்த் மலேசியா சென்றுள்ளார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். ரஜினிகாந்த் தீவிர அரசியலில் குதித்திருக்கும் நேரத்தில் மலேசிய பிரதமர் ரஜினிகாந்தை 'தலைவா' எனக் குறிப்பிட்டிருப்பது கவனிக்க வேண்டிய ஒன்று.