ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரஜினி 6 நாட்கள் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வந்தார். 3-வது நாளில் அதாவது கடந்த 28-ம் தேதி மதுரை, சேலம், விருதுநகர் மாவட்ட ரசிகர்களை சந்தித்தார். அவர்களிடையே பேசிய ரஜினி, "உங்களுக்கெல்லாம் கிடா வெட்டி விருந்து வைக்க ஆசை. ஆனால் இந்த கல்யாண மண்டபம் சைவம். கிடா விருந்தை இன்னொரு நாள் இன்னொரு இடத்தில் வைத்துக் கொள்வோம்" என்று கூறினார்.
ரஜினி ஆசையை நிறைவேற்றுவோம் என்று அவரது ரசிகர்கள் முடிவு செய்து நாளை (7ந் தேதி) மதுரை அழகர் கோவிலில் மதுரை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் ஆயிரம் பேருக்கு கிடா விருந்துக்கு ஏற்பாடு செய்தனர். இந்த நிலையில் கிடா விருந்தை நிறுத்துமாறு பீட்டா அமைப்பின் பொது நல கொள்கைகள் பிரிவின் தலைவர் நிகுஞ்ச் ஷர்மா, நடிகர் ரஜினிகாந்திற்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
உங்களுடைய அரசியல் அறிவிப்பிற்கு வாழ்த்துக்கள். சினிமாவின் வெற்றியை தொடர்ந்து நீங்கள் அரசியலுக்கு வந்து இருப்பதற்கு வாழ்த்துக்கள். உங்களுக்கு இருக்கும் புகழும் பலமும் மக்களுக்கு நல்ல பலனை அளிக்கும் என்று நம்புகிறோம். உங்கள் கையில் உள்ள ஆற்றலின் மூலம் பலரது வாழக்கையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தலாம். அதன் அடிப்படையில் உங்களது அரசியல் பிரவேசத்தை முன்னிட்டு, ரசிகர்கள் கொண்டாடத் திட்டமிட்டுள்ள விழாவில், ஆடுகளை வெட்ட வேண்டாம் என்று வலியுறுத்துமாறு மரியாதையுடன் கேட்டுக் கொள்கிறோம். ஆடுகளை வெட்டுவது என்பது கொடூரமானதுடன் இந்திய சட்டங்களுக்கு எதிரான ஒன்றாகும். இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து கிடா விருந்தை தவிர்க்குமாறு ரஜினி மதுரை மாவட்ட ரசிகர் மன்றத்தை கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. தற்போது கிடா வெட்டு இல்லை. விருந்து உண்டு என்று மதுரை மாவட்ட ரசிகர் மன்றம் தெரிவித்துள்ளது.